Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா மலேசியாவில் வெள்ளம்; மூவர் பலி; 35,000 பேர் பாதிப்பு

மலேசியாவில் வெள்ளம்; மூவர் பலி; 35,000 பேர் பாதிப்பு

0 minutes read

மலேசியாவில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அங்கு பெரும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ள அனர்த்தத்தில் மூவர் பலியாகியுள்ளனர் எனவும் 35,000 பேர் அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் பலியானவர்கள் வயோதிபர்கள் என்றும் அவர்கள் தமது வீட்டில் சிக்கிக்கொண்ட நிலையில் பலியானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளத்தில் ஜொகூர் மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் இருந்து மட்டும் 31,000க்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அங்கு சுமார் 200 தற்காலிகத் தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மலேசியாவின் தேசியப் பேரிடர் நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More