மலேசியாவில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அங்கு பெரும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ள அனர்த்தத்தில் மூவர் பலியாகியுள்ளனர் எனவும் 35,000 பேர் அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தில் பலியானவர்கள் வயோதிபர்கள் என்றும் அவர்கள் தமது வீட்டில் சிக்கிக்கொண்ட நிலையில் பலியானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளத்தில் ஜொகூர் மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் இருந்து மட்டும் 31,000க்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அங்கு சுமார் 200 தற்காலிகத் தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மலேசியாவின் தேசியப் பேரிடர் நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.