ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த குழுவில் இடம்பெற்றிருந்த ரஷ்ய விஞ்ஞானி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை கண்டுபிடித்ததற்காக 18 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழுவில் அண்டிரு பொட்டிக்வ் (வயது 47) என்ற விஞ்ஞானி இடம்பெற்றிருந்தார்.
இந்த விஞ்ஞானி, நேற்று (04) அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில், கழுத்து நெரித்து விஞ்ஞானி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 29 வயது நபரை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டுள்ள அண்டிரு விஞ்ஞானி உட்பட 18 விஞ்ஞானிகளுக்கும் நாட்டின் உயரிய விருதை 2021ஆம் ஆண்டு ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் பூட்டின் வழங்கிக் கௌரவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.