இந்தியாவுடன் எல்லைப் பிரச்சினையில் ஈடுபட்டுள்ள சீனா தனது உண்மையான முகத்தைக் காட்டியுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு வெளியிட்ட அறிக்கையில், சீனா பல்வேறு எல்லைகளில் ஆக்ரமிப்பு செய்வது வழக்கமான ஒன்றுதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சீன எல்லைப் பிரச்சினை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இருநாடுகளும் பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமைதியான முறையில் தற்போதைய பிரச்சினைக்குத் தீர்வு காண அமெரிக்கா முழு ஆதரவு அளிப்பதாகவும் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளை இந்தியா தடை செய்ததற்கும் அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.