சுற்றுலா பயணிகள் பஸ்சொன்று கொழும்பிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த போது , பண்டாரவளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்சொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் காயமடைந்த நால்வரும், ஹல்துமுல்ல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக தியதலாவ மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணமென தெரிவித்த ஹப்புத்தளை பொலிசார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.