
ஐ. தே.க. மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) கூடவுள்ளது.ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குறித்த கூட்டம் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
கட்சி மறுசீரமைப்பு மற்றும் பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி.பெரேரா மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்ட செயற்குழுவில் சேர்க்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய மத்திய செயற்குழுவின் செயற்பாட்டுக்காலம், கடந்த 31ஆம் திகதியுடன் நிறைவடைந்ததமை குறிப்பிடத்தக்கது.