Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மீண்டும் எமது பிள்ளைகளை வைத்து இயக்கம் – வேலாயுதம் கணேஸ்வரன்

மீண்டும் எமது பிள்ளைகளை வைத்து இயக்கம் – வேலாயுதம் கணேஸ்வரன்

1 minutes read

தமிழ் மக்களை தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய நிர்பந்தத்தில் நாங்கள் உள்ளோம் என்று வேலாயுதம் கணேஸ்வரன்கூறியுள்ளார்.

கிளிநொச்சி மாயவனூர் பகுதியில் இன்றையதினம் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்மாவட்ட முதன்மை வேட்பாளர் வேலாயுதம் கணேஸ்வரன் தேர்தல் பிரசாரக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் எமக்கு எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றது அவை எவற்றையும் எமது தமிழ் அரசியல்வாதிகள் பார்ப்பதில்லை அவர்கள் தமிழ் என்ற மாயையை மாத்திரம் காட்டி தமிழருக்கு உரிமை வேண்டும் என்று கடந்த 75 வருடங்களாக இதனையே கூறிக் கொண்டு வருகின்றனர்.

நாங்கள் கடந்த முப்பது வருடங்களாக முப்படை வைத்து போராடினோம் அதன் மூலம் கிடைக்காத ஒன்றை இவர்கள் திரும்பவும் ஐக்கியநாடுகள் சர்வதேச நாடுகளின் மூலம் பெறப்போகிறோம் என்று கூறுகிறார்கள்.

ஆனால் இந்த ஐக்கியநாடுகள் சர்வதேச நாடுகள் எல்லாம் 2009 ஆம் ஆண்டு எமது மக்கள் கொத்து கொத்தாய் அழியும் போது வரவில்லை இப்ப எப்படி வருவார்கள் . அவர்கள் வருவார்கள் என்று தமிழ் அரசியல்வாதிகள் மாயை காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த உரிமை உரிமை என்று கதைப்பவர்கள் எவர்களுக்கும் இயக்கத்துடன் தொடர்பில்லை இவர்கள் எவருமே ஆயுதம் ஏந்தவில்லை. இவர்களின் கதையை இப்ப பார்த்தால் மீண்டும் எமது பிள்ளைகளை வைத்து இயக்கம் ஆரம்பிப்பது போல் இருக்கு.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More