ஒட்டுசுட்டான் -முத்தய்யன்கட்டு வன பகுதிக்கு சுற்று பயணம் மேற்கொண்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் 9 பேரும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.
காவற்துறை மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த மாணவர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் குறித்த மாணவர்கள் இவ்வாறு வன பகுதிக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஒட்டுச்சுட்டான் காவற்துறை நிலைய அதிகாரிகள் குழு, இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்கள் , பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து குறித்த தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.