அமைச்சர் விமல் வீரவன்சாவின் மனைவி சஷி வீரவன்சாவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
அத்துடன் இந்த வழக்கு தொடர்பான விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் இராஜதந்திர கடவுச்சீட்டு உட்பட இரண்டு கடவுச்சீட்டுகளை மோசடியாகப் பெற்றதாக சஷி வீரவன்சா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டை பெறுவதற்காக போலி பெயர்கள் மற்றும் பிறந்த திகதிகள் அடங்கிய ஆவணங்களை சமர்ப்பித்த அவர் ஆரம்பத்தில் 2015 பெப்ரவரியில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.