முன்னாள் பரீட்சைகள் ஆணையர் நாயகம் மஹிந்த விஜேசிரி இன்று (18) காலை ஹொரன-கெஸ்பேவபிரதான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார் என்று பிலியந்தல பொலிசார் தெரிவித்தனர்.
இவரது தனிப்பட்ட வியாபாரத்திற்காக கஹதுடுவவிலிருந்து நுகேகொவுக்குச் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட நோய் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது என்று பொலிசார் தெரிவித்தனர்.
அவர் இறக்கும் வயது 78 வயது. கஹதுடுவவின் பொல்கசோவிடவில் வசித்து வந்தார்.
இன்று காலை கடையொன்றின் முன்பாக கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக காரொன்று நிறுத்தப்பட்டிருந்ததை அவதானித்த கடையின் ஊழியர் சென்று பார்த்தபோது, ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், உயரிழந்தவர் முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் மஹிந்த விஜேசிரி என அடையாளம் கண்டனர்.
மஹிந்த விஜேசிரி 2000-2004 வரை பரீட்சைகள் ஆணையாளராக பணியாற்றினார்.