0
சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 33 ஆயிரம் கிலோகிராம் உலர் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுங்கத்திணைக்களம் மற்றும் கொழும்பு 13 பொலிஸாரினால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
7 லொறிகள் மற்றும் மூன்று கனரக வாகனங்களில் கடத்திச் செல்வதற்கு முயற்சித்த சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.