வவுனியா நகர்ப்பகுதிகளை சேர்ந்த மூவருக்கு இன்றையதினம்(வியாழக்கிழமை) கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநிலையில், வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் ஒருபகுதி முடிவுகள் இன்று காலை வெளியாகின.
அதனடிப்படையில் வவுனியா கந்தசாமி கோவில் வீதியில் உள்ள வியாபார நிலையங்களில் பணிபுரியும் மூவருக்கு தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டது.
இதன்காரணமாக வவுனியா நகர்பகுதியில் கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் 151 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.