செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ரிஷாடிற்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிப்பதற்கு விமலுக்குத் தடை!

ரிஷாடிற்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிப்பதற்கு விமலுக்குத் தடை!

0 minutes read

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக அமைச்சர் விமல் வீரவன்ச அவதூறு கருத்துக்களை வெளியிடுவதற்கு கொழும்பு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரிஷாட் பதியுதீனால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி குறித்த தடை உத்தரவு மார்ச் 31 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் என்றும் கொழும்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முஸ்லீம் தீவிரவாதம் மற்றும் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பாக அமைச்சர் விமல் வீரவன்ச அண்மையில் தெரிவித்த கருத்திற்கு எதிராக ரிஷாட் பதியுதீன் மனுதாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாக தெரிவித்து 100 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.