‘மன்னாரின் அபிவிருத்திக்கான பயணம்’ அமைப்பினால், வறுமைக்கோட்டிலுள்ள 150 குடும்பங்களுக்கு, நேற்று (சனிக்கிழமை) இந்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறிப்பாக பெண் தலைமைத்து குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்பங்கள் உள்ளிட்ட வறுமைக்கோட்டிலுள்ள குடும்பங்களுக்கே இவ்வாறு உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மருதமடு, மூன்றாம் பிட்டி, பரப்பாங்கண்டல், சாந்திபுரம், செல்வநகர், அந்தோனியார்புரம், தேவன் பிட்டி, ஆகிய கிராமங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கே இவ்வாறு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.