Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வவுனியா மாவட்ட புதிய அரசாங்க அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்!

வவுனியா மாவட்ட புதிய அரசாங்க அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்!

1 minutes read

வவுனியா மாவட்ட புதிய அரசாங்க அதிபராக பௌத்தசாசன அமைச்சில் உயர் அதிகாரியாக பணியாற்றிய பி.ஏ. சரத்சந்திர, தனது கடமைகளை இன்று (வெள்ளிக்கிழமை) பொறுப்பேற்றார்.

வவுனியா அரச அதிபராக கடமையாற்றிய சமன் பந்துலசேன, வட.மாகாண பிரதம செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஒரு மாதகாலமாக மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய தி.திரேஸ்குமார், பதில் அரசாங்க அதிபராக தனது பொறுப்புக்களை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையிலேயே பௌத்தசாசன அமைச்சில் முக்கிய பதவியினை வகித்த பி.ஏ. சரத்சந்திர, வவுனியா மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார்.

அந்தவகையில் அவர் தனது கடமைகளை, இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

குறித்த நிகழ்வில் மதகுருமார்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலகத்தின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More