Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கு விசாரணைகள் குறித்து மௌனமாக இருக்க அரசாங்கம் முடிவு!

லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கு விசாரணைகள் குறித்து மௌனமாக இருக்க அரசாங்கம் முடிவு!

1 minutes read

குறித்த வழக்கு விசாரணைகளில் அரசாங்கம் ஏன் மௌனமாக உள்ளதென ஆங்கில ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும, விசாரணைகள் மற்றும் நீதிமன்றத்தின் முன் வழக்குகள் அல்லது சட்டமா அதிபரால் கையாளப்படுவது குறித்து அரசாங்கம் கருத்து தெரிவிக்காது என்று கூறினார்.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை, ஊடகவியலாளர் கீத் நொயார் மீது கடத்தல் மற்றும் தாக்குதல் மற்றும் 11 இளைஞர்கள் கடத்தல் மற்றும் கட்டாய காணாமல்போனது தொடர்பான விசாரணைகள் குறித்து அரசாங்கம் பெரும்பாலும் ம மௌமாக உள்ளது.

11 இளைஞர்கள் கடத்தல் வழக்கில் கடற்படை அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர வேண்டாம் என்று அட்டர்னி ஜெனரல் சஞ்சய் ராஜரத்தினம் சமீபத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு அறிவித்திருந்தார்.

இந்த சம்பவங்கள் நீதிமன்றத்திற்கு முன்பாகவோ அல்லது அட்டர்னி ஜெனரலால் கையாளப்படுவதாகவோ, அரசு இதில் ஈடுபடுவது நெறிமுறை அல்ல என்றும் அழகப்பெரும கூறினார்.

வழக்குகள் தொடர்பாக பல்வேறு கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டு வருவதாகவும், அந்த கருத்துக்கள் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

எனினும், நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகள் குறித்து அரசு எந்த அறிக்கையும் அளிக்காது என தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More