Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்!

விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்!

1 minutes read

உர நெருக்கடியால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கேட்டுக்கொண்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசியபோதே நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, இந்த கோரிக்கையை விடுத்திருந்தார்.

அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளினாலேயே உரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது என்றும் இதுவே மரக்கறி மற்றும் அரிசியின் விலை அதிகரிப்புக்கு காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இதேவேளை இவ்வாறான நெருக்கடி நிலையின் போது அரசாங்கத்தின் உறுப்பினர்கள் எவ்வாறு வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை மேற்கொள்கின்றனர் என்றும் காவிந்த ஜயவர்தன கேள்வியெழுப்பினார்.

நாட்டின் தற்போதைய நிலைமையை ஏன் தற்போதைய அரசாங்கத்தினால் புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More