Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மட்டு நகர் பார்வீதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சடலமாக கண்டெடுப்பு!

மட்டு நகர் பார்வீதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சடலமாக கண்டெடுப்பு!

0 minutes read

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார்வீதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முச்சக்கர வண்டி சாரதியொருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் சேதமடைந்த நிலையில் முச்சக்கர வண்டியும் மீட்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை கறுவப்பங்கேணியிலிருந்து மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு பயணிகளை ஏற்றுவதற்காக சென்றவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவருகின்றது.

சடலமாக மீட்கப்பட்டவர் கறுவப்பங்கேணி,நாவலர் வீதியை சேர்ந்த 49வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான மாசிலாமணி தர்மரெட்னம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகாலை பொதுமக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்க்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More