0
பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியதால் அதில் பயணித்தவர்களில் 15 மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் வலஸ்முல்ல ஹிங்குவரத்தை, ஹந்துகலவில் நேற்று இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான பஸ்ஸில் 30 மாணவர்கள், 2 ஆசிரியர்கள், 6 பயணிகளும் சென்று கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் சிறு காயங்களுக்குள்ளான 15 மாணவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.