Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தனியார் ஆசிரியருக்கு கடூழிய சிறைத் தண்டனை

தனியார் ஆசிரியருக்கு கடூழிய சிறைத் தண்டனை

1 minutes read

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காகவும், விஜயதாச ராஜபக்ஷவை நீதிமன்றில் அச்சுறுத்திய குற்றத்திற்காகவும் தனியார் ஆசிரியர் ஒருவருக்கு 5 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத் தண்டனையை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது.

300,000 ரூபாய் அபராதம் செலுத்தவும் 03 மாத சிறைத்தண்டனை விதித்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்து நீதிமன்ற அவமதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறிய நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டது.

குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள மறுத்த பிரதிவாதியான ஆசிரியர், இன்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் நீதிமன்றத்திடம் மன்னிப்புக் கோரினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More