வரி செலுத்துதலின் அடிப்படையில், புதிய ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், சமூக பாதுகாப்பு சபையினூடாக தொழில்முனைவோர், வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்குரிய புதிய ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேவேளை, உரிய நேரத்தில் வரி செலுத்தும் பட்சத்தில்,தொழில்ரீதியிலான அபாயத்தின் அடிப்படையில் இந்த முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.