Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை டயானா கமகேவின் பதவி பறிக்கபட வேண்டும்| ஓஷல ஹேரதி

டயானா கமகேவின் பதவி பறிக்கபட வேண்டும்| ஓஷல ஹேரதி

0 minutes read

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரதினால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் டயானா கமகே பிரித்தானிய பிரஜை என மனுதாரர் கோரியுள்ளார். நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் அவ்வாறானவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் எனவும் அது சட்டத்திற்கு முரணானது எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரதிவாதிகளாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர், பொது பாதுகாப்பு அமைச்சர், சமகி ஜனபலவேகவின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More