Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஓமானுக்குப் பெண்களைக் கடத்திய மற்றுமொருவருக்கும் விளக்கமறியல்

ஓமானுக்குப் பெண்களைக் கடத்திய மற்றுமொருவருக்கும் விளக்கமறியல்

1 minutes read

மனிதக் கடத்தல் தொடர்பில் அவிசாவளை – புவக்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் கொழும்பு – கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, அவரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின், மனித கடத்தல் மற்றும் சமுத்திர குற்றச் செயல்கள் விசாரணைப் பிரிவின் விசாரணை அதிகாரிகளால் நேற்றுமுன்தினம் மாலை அவர் கைதானார்.

ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாகப் பெண்களை ஏமாற்றி இடைத்தரகராகக் குறித்த நபர் செயற்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

45 வயதான அவர் அவிசாவளை – புவக்பிட்டி பகுதியைச் சேர்ந்தவராவார்.

சந்தேகநபரால் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கு பிரச்சினையை எதிர்நோக்கிய நிலையில் மீண்டும் நாடு திரும்பிய பெண்கள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More