செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு!

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு!

1 minutes read

புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த எரிபொருள் ஒதுக்கீடுவை இன்று (04) நள்ளிரவு முதல் அதிகரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னதாக திட்டமிட்டபடி, பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் எரிபொருள் தேவைக்கு ஏற்ப, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தேவையான கைருப்புகளை முன்கூட்டியே பெற்றுக்கொண்டுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி ஒரு வாரத்துக்கு கீழ்கண்டவாறு பரிந்துரைக்கப்பட்ட ஒதுக்கீட்டில் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

* ஓட்டோக்களுக்கு 5 லீற்றரில் இருந்து 8 லீற்றராகவும்

* மோட்டார் சைக்கிள்களுக்கு 4 லீற்றரில் இருந்து 7 லீற்றராகவும்

* பஸ்களுக்கு 40 லீற்றரில் இருந்து 60 லீற்றராகவும்

* கார்களுக்கு 20 லீற்றரில் இருந்து 30 லீற்றராகவும்

* லொறிகளுக்கு 50 லீற்றரில் இருந்து 75 லீற்றராகவும்

* வான்களுக்கு 20 லீற்றரில் இருந்து 30 லீற்றராகவும்

* LAND VEHICLE 15 லீற்றரில் இருந்து 25 லீற்றராகவும்

* QUADRICE CYCLE 4 லீற்றரில் இருந்து 6 லீற்றராகவும்

* சிறப்பு நோக்க வாகனங்களுக்கு 20 லீற்றரில் இருந்து 30 லீற்றராகவும் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.