June 5, 2023 11:07 am

மாணவிகளைத் துஷ்பிரயோகப்படுத்திய மற்றுமொரு ஆசிரியர் மறியலில்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பாடசாலை மாணவிகளைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு மேலதிக வகுப்பின் ஆசிரியர் இந்த மாதம் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலனறுவைப் பகுதியில் உள்ள மேலதிக வகுப்பு ஒன்றின் ஆசிரியரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் பல சந்தர்ப்பங்களில் குறித்த ஆசிரியர் மாணவிகளைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதுடன், துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 6 மாணவிகளின் பெற்றோரினால் பொலனறுவை பொலிஸாரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சில பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த அச்சத்தில் பொலிஸாரிடம் முறைப்பாடு அளிக்காமல் உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய 41 வயதான குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு பொலனறுவை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேநேரம் இதேபோன்றதொரு சம்பவம் களுத்துறை பகுதியில் பதிவாகியிருந்ததுடன் 16 பாடசாலை மாணவிகளைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஆசிரியர் கைது செய்யப்பட்டு இந்த மாதம் 26 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
….

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்