Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிரபாகரனைப் பிக்குகள்தான் உருவாக்கினர்! – உண்மையை உரைக்கிறார் மைத்திரி

பிரபாகரனைப் பிக்குகள்தான் உருவாக்கினர்! – உண்மையை உரைக்கிறார் மைத்திரி

1 minutes read

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பிக்குகளே உருவாக்கினர் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பண்டாரநாயக்கா – செல்வநாயகம் (பண்டா – செல்வா) ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இந்த நாட்டில் பிரபாகரன் உருவாகியிருக்கமாட்டார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“1956இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியில் சிங்கள மொழி அரச கரும மொழியாக்கப்பட்டது. இதற்கு வடக்கில் இருந்து எதிர்ப்புகள் வலுத்தன. சர்ச்சைகள் உருவாகின.

அதன்பின்னர் தமிழ் மொழியும் அரச மொழியாக்கப்பட்டது. செல்வா – பண்டா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முற்பட்ட போது இன்று போலவே அன்றும் மகா சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பண்டாரநாயக்கவின் வீடு சுற்றிவளைக்கப்பட்டது. இறுதியில் குறித்த ஒப்பந்தத்தைப் பண்டாரநாயக்க கிழித்தெறிந்தார். அந்த ஒப்பந்தம் நடைமுறையாகி இருந்தால் பிரபாகரன் உருவாகியிருக்கமாட்டார். நாட்டில் போரும் ஏற்பட்டிருக்காது. எனவே, பிக்குகளே பிரபாகரனை உருவாக்கினர். அதேபோல் டட்லி – செல்வா ஒப்பந்தத்துக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More