செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முதலையால் இழுத்துச் செல்லப்பட்டவர் சடலமாக கண்டுபிடிப்பு

முதலையால் இழுத்துச் செல்லப்பட்டவர் சடலமாக கண்டுபிடிப்பு

0 minutes read

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் முதலை இழுத்துச் சென்ற நபர் இரண்டு நாட்களின் பின் இன்று (22) சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (20) மந்திரியாறு நீரோடை பகுதியில் இந்த நபர் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோதே முதலையால்  இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் சுங்கான்கேணி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஆவார்.

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட இந்த நபரை கடந்த இரு நாட்களாக உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் தேடிவந்த நிலையில், இன்று  காலை அவர், இடுப்புக்கு கீழ்ப் பகுதியற்ற நிலையில்  சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More