செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் கைது!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் கைது!

0 minutes read

கேகாலை மாவட்டத்தில் மாவனெல்லை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தனாகம பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் இளைஞன் ஒருவன் மாவனெல்லை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாவனெல்லை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மாவனெல்லை , தனாகம பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய  இளைஞன் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 05 கிராம் 350 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 9 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும்  போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்ததாக கூறப்படும் 22 ஆயிரத்து 600 ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More