செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பலஸ்தீன் – இஸ்ரேல் மோதல் மனித பேரழிவு | சஜித் கவலை

பலஸ்தீன் – இஸ்ரேல் மோதல் மனித பேரழிவு | சஜித் கவலை

1 minutes read

பலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அதிகாரப் போர் தற்போது மனித பேரழிவாக உருவெடுத்து வருகிறது. இந்தப் பேரழிவை தடுப்பதற்கு அஹிம்சை மாத்திரமே ஒரே வழியாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

காசாவை இஸ்ரேல் இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது தொடர்பான பிரதமர் பெஞ்சமின்னின் திட்டத்துக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் செய்துள்ள பதிவிலேயே எதிர்க்கட்சி தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் யாருடைய வரலாறு அதிக பலம் கொண்டது என்பது பற்றிய விவாதத்துக்கு அப்பால், இது ஒரு மனித பேரழிவாக மாறிவிட்டது.

இந்தப் பேரழிவைத் தடுப்பதற்கு அகிம்சை மட்டுமே ஒரே வழி, வேறு வழியில்லை. பிரதேசம் அல்லது வளங்களை வெல்வதை விட, நமது மனிதநேயத்தை இழப்பது குறித்து நாம் மிகவும் கவலைப்பட வேண்டும். நாம் அதை இழந்தால், எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.