செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்தது!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்தது!

1 minutes read

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்தை  கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி 01 முதல் பெப்ரவரி 12 வரையான காலப்பகுதியில் 401,787 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

குறித்த காலப்பகுதியில், ஒரே நாளில் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள் வருகை பெப்ரவரி 12ஆம் திகதி வருகை தந்துள்ளனர். அதன்படி குறித்த திகதியில் 12,731 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளனர்.

அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர். அதன்படி இந்தியாவிலிருந்து 70,880 சுற்றுலா பயணிகள் வருகைத்தந்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து பிரித்தானியாவிலிருந்து 44,053 சுற்றுலா பயணிகளும், ரஸ்யாவிலிருந்து 36,949 சுற்றுலா பயணிகளும், ஜேர்மனியிலிருந்து 28,332 சுற்றுலா பயணிகளும் சீனாவிலிருந்து 22,309 சுற்றுலா பயணிகளும் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதேநேரம், பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளனர்.

மேலும், பெப்ரவரி மாதத்தின் முதல் 12 நாட்களில் மாத்திரம் 124,460 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.