செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சம்பூர் கடலில் நீராடிய 19 வயது இளைஞன் நீரில் மூழ்கி பலி: மூதூரில் சோகம்

சம்பூர் கடலில் நீராடிய 19 வயது இளைஞன் நீரில் மூழ்கி பலி: மூதூரில் சோகம்

0 minutes read

திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் அமைந்துள்ள வெளிச்ச வீட்டு கடற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை (12) குடும்ப சமையல் சென்ற 19 வயது இளைஞர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது திடீரென எழுந்த கடல் அலை காரணமாக குறித்த இளைஞர் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டது.

உயிரிழந்தவர் மூதூர், ஹைரியா நகர் பகுதியைச் சேர்ந்த சௌமி முஹம்மது அப்லல் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞனின் திடீர் மறைவால் அந்தப் பகுதி மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.