செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் 54 அதிவேக வீதிகள் மூலம் 163 மில்லியன் ரூபா வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் 54 அதிவேக வீதிகள் மூலம் 163 மில்லியன் ரூபா வருமானம்

0 minutes read

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு கடந்த 03 நாட்களில் மாத்திரம் அதிவேக வீதிகளின் ஊடாக 163 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மாத்திரம் அதிவேக வீதிகளில் 434,338 வாகனங்கள் பயணித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அனுராத ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதில் கடந்த 12 ஆம் திகதி மாத்திரம் 45 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் கிடைத்துள்ளது.

இதேவேளை, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு அல்லது விபத்துக்களுக்கு உள்ளானால், உடனடியாக 1969 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.