செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இந்திய துணை ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இந்திய துணை ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

0 minutes read

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (19) ஞாயிற்றுக்கிழமை  இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு தொடர்பாக சஜித் பிரேமதாச தனது சமூக ஊடகப் பதிவில், இந்திய துணை ஜனாதிபதியை இலங்கைக்கு அன்புடன் வரவேற்றதாக தெரிவித்துள்ளார்.

மேலும், வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தல், பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தல் மற்றும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் நடைமுறை வாய்ப்புகளை உருவாக்குவது குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையும் இந்தியாவும் வெறும் அண்டை நாடுகள் மட்டுமல்ல; பொதுவான வரலாறு, சவால்கள் மற்றும் எதிர்காலத்தை பகிர்ந்து கொள்ளும் உண்மையான கூட்டாளிகள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து குடிமக்களுக்கும் இந்த கூட்டுறவின் பலன்களை அடைய, உறுதியான நோக்கத்துடன் மற்றும் நம்பிக்கையுடன் முன்னேற வேண்டிய தருணம் இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.