செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சினோபெக் மற்றும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

சினோபெக் மற்றும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

1 minutes read

சனிக்கிழமை (30) முதல் அமுலுக்கு வரும் வகையில் சினோபெக்  மற்றும் லங்கா ஐ.ஓ.சி ஆகிய நிறுவனங்களும் தங்களது எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளன.

முன்னதாக, நேற்று நள்ளிரவு முதல் அனைத்து வகையான எரிபொருட்களினதும் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்  தீர்மானித்திருந்த நிலையில், அதனைப் பின்பற்றி ஏனைய இரு நிறுவனங்களும் இந்த விலை அதிகரிப்பை அறிவித்துள்ளன.

உள்ளூர் வணிக தகவல்கள்

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ள விலை திருத்தங்களின்படி, எரிபொருட்களின் புதிய விலைகள் வருமாறு:

ஒக்டேன் 92 பெற்றோல்: ஒரு லீற்றரின் விலை 24 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. (பழைய விலை: 410 ரூபா | புதிய விலை: 434 ரூபா).

ஒக்டேன் 95 பெற்றோல்: ஒரு லீற்றரின் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. (பழைய விலை: 470 ரூபா | புதிய விலை: 495 ரூபா).

ஒட்டோ டீசல்: ஒரு லீற்றரின் விலை 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. (பழைய விலை: 392 ரூபா | புதிய விலை: 407 ரூபா).

சுப்பர் டீசல்: ஒரு லீற்றரின் விலை 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. (பழைய விலை: 458 ரூபா | புதிய விலை: 478 ரூபா).

மண்ணெண்ணெய்: ஒரு லீற்றரின் விலை 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. (பழைய விலை: 265 ரூபா | புதிய விலை: 285 ரூபா).

இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் நிறுவனங்களும் இந்த விலை அதிகரிப்பை நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தியுள்ள போதிலும், சினோபெக்  நிறுவனம் சுப்பர் டீசல் விலையில் மாத்திரம் எந்தவொரு மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. அதன்படி, அவர்கள் தற்போதும் ஒரு லீற்றர் சுப்பர் டீசலை 600 ரூபாய் என்ற பழைய விலையிலேயே தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.