செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஆலயங்கள் பொதுமக்களுக்கான சேவைகளையும் செய்ய வேண்டும் | கலாநிதி ஆறுதிருமுருகன்

ஆலயங்கள் பொதுமக்களுக்கான சேவைகளையும் செய்ய வேண்டும் | கலாநிதி ஆறுதிருமுருகன்

1 minutes read

இந்து ஆலயங்கள் மட்டுமல்ல பிறமத ஆலயங்கள் சடங்குகள் சம்பிரதாயங்கள் திருவிழாக்களை மட்டும் செய்துகொண்டு இருக்காது பொதுமக்களுக்கு எத்தகைய சேவைகளை செய்த வேண்டுமோ அதனை அறிந்து செய்ய வேண்டும் என தொல்லிப்பளை துர்கை அம்மாள் தேவஸ்தான தலைவரும் சிவபூமி அறக்கட்டளை தலைவருமான கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார்.

தெல்லிப்பழை ஸ்ரீ துர்கை அம்மாள் ஆலய யாத்திரிகர் மண்டபத்தில் மாதம் தோறும் இலவச வைத்திய சேவை நிலையத்தை ஆரப்பித்து வைத்து உரையாற்றும்போது இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தெல்லிப்பழை ஸ்ரீ துர்கை அம்மாள் தேவஸ்தானம் ஆற்றும் சமூகசேவை பணிகளில் ஒன்றான மாதம் தோறும் இலவச வைத்திய சேவை நிலையம் இங்கு திறந்துவைக்கப்படுகிறது.

ஈழத் திருநாட்டில் ஆலயங்கள் சமயப்பணி சமூகப்பணி ஆற்ற வேண்டும் என்ற உன்னதமான மகத்துவமான குரலை ஓங்கி ஒரிக்க செய்தவர் தங்கம்மா அப்பாகுட்டி அவரது ஆற்றுப்படுத்தலில் வளர்ந்தநான் தற்போது எமது தேவஸ்தானம் பல்வேறு சேவைகளை செய்துவரும் வேளையில் வலி வடக்கு மக்களின் நன்மை கருதி யாழ் போதனாவைத்தியசாலை வைத்தியர்களையும் யாழ்பாண மருத்துவ பீட பேராசிரியர்களையும் இங்கு அழைத்து இலவசமாக வைத்திய ஆலோசனைகளை வழங்கும் பணிகளை ஆரம்பித்துள்ளோம்.

அந்த வகையில் தெல்லிப்பளை தேவஸ்தானத்தின் உப தலைவர் வைத்தியர் றவிறாச் அவரது முயற்சியினால் இங்கு பல வைத்திய நிபுணர்கள் இங்கு வருகைதருகிறார்கள் அவர்கள் மக்களுக்கு இலவசமாக ஆலோசனைகளை வழங்கிவருகிறார்கள்.

இவர்களுடன் பிரதேச வைத்திய அதிகாரிகள் ,தாதியர்கள் ,மருத்துவ பணியாளர்கள் எமது தேவஸ்தானத்தில் கடமையாற்ற முன்வந்துள்ளார்கள். எமது தேவஸ்தானம் ஆதரவற்ற பெண்பிள்ளைகளுக்கான மகளிர் இல்லங்களையும் ,மற்றும்பல சமூகப் பணிகளையும் ஆற்றிவருவது பலருக்கும் தெரிந்த விடயம் மேலும் பன்னிரு திருமுறைகள் வெளியீட்டு,கந்தபுராணம் வெளியீடு செய்து சகல ஆலயங்களுக்கும் வழங்கிவருகிறது .

ஏழை மாணாக்கர்கள் பல்கலைக்கழகத்தில் கற்பதற்கு வசதியாக நிதியுதவி செய்து வருவதுடன் பாரம்பரிய சித்த வைத்தியத்துறையை பேணும் வகையில் சுன்னாகத்தில் மூன்றுமாடி கட்டடத்தில் அமைத்து அதில் சித்த வைத்தியசாலையை ஆரம்பித்து அதில் சித்த வைத்திய பாராம்பரியத்தை வைத்தியசாலையாக இயக்கி வருகின்றோம்.

அதற்கு அடுத்த கட்டமாக ஆங்கில வைத்திய ஆலோசனை வைத்திய சேவையை தெல்லிப்பளை துர்காதேவி யாத்திரிகர் விடுதியில் மாதோறும் இயக்க ஆரம்பித்துள்ளோம்.

எனவே பொது மக்கள் இவற்றை நன்றாக பயன்படுத்த வேண்டும் அதேநேரத்தில் இத்தகைய பணிகளை எனைய தேவஸ்தானங்களும் எனைய பிற ஆலயங்களும் இப்பணிகளில் ஈடுபட்டால் மக்களுக்கு உதவியாக இருக்கும்.

வேறுமென சம்பிரதாயங்கள் ,சடங்குகள் திருவிழாக்கள் மட்டுமல்ல மக்களுக்கு என்ன தேவையோ அதனை ஆலயங்கள் செய்ய வேண்டும் என்பதனை எங்கள் தேவஸ்தானம் முழுமையாக செய்து வருகிறது.

இந்த வைத்திய சேவையை செய்வதற்கு அனுமதித்த யாழ் போதனா வைத்தியசாலை, வடக்கு மாகாண சுகாதர அமைச்சு மற்றும் துறைசார்ந்தவர்களுக்கு நன்றிகளை தெரிவிக்கு அதேவேளை பொதுமக்கள் இந்த சேவைகளை முழுமையாக பெற்றுகொள்ள வேண்டும் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.