0
வாஷிங்டன்: மியான்மரில் ஜனநாயகத்தின் சக்தியை முடக்குவதை கண்டிப்பாக ராணுவம் கைவிட வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மியான்மரில் ஏற்கனவே உள்ள ஜனநாயகத்தை முடக்குவதை ராணுவ ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய நாடுகளுடனான வெளிநாட்டு கொள்கை குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். சீனாவின் மனித உரிமைகள் மீதான பல்வேறு தாக்குதல்களை அமெரிக்கா கடுமையாக எதிர்க்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.