செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பெற்ற மகனைப் பொலிஸில் ஒப்படைத்த தாய்!

பெற்ற மகனைப் பொலிஸில் ஒப்படைத்த தாய்!

1 minutes read

உயிர்கொல்லிப் போதைப்பொருளுக்கு அடிமையான 24 வயதான மகனை பொலிஸாரிடம் தாயார் ஒப்படைத்துள்ளார்.

இந்தச் சம்பவம் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தந்தை இல்லாத நிலையில் தனது அரவணைப்பில் மகனைத் தாயார் கஷ்டப்பட்டு வளர்த்துள்ளார். இளைஞர் சில மாதங்களாக உயிர்கொல்லிப் போதைப்பொருள்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். அதற்கு அடிமையான நிலையில், வீட்டிலிருந்த பொருள்களை ஒவ்வொன்றாக விற்பனை செய்தும், அடமானம் வைத்தும் உயிர்கொல்லி போதைப் பொருளை பயன்படுத்தியுள்ளார்.

தாயின் மோதிரத்தைத் தருமாறும் இளைஞர் வற்புறுத்திய நிலையிலேயே, அவர் பொலிஸில் மகனைக் கையளித்துள்ளார்.

இளைஞர் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். மருத்துவப் பரிசோதனைகளில் அவர் உயிர்கொல்லிப் போதைப்பொருள் பயன்படுத்துவது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More