செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் ஒரே நாளில் 4 மோட்டார் சைக்கிள்கள் களவு!

யாழில் ஒரே நாளில் 4 மோட்டார் சைக்கிள்கள் களவு!

0 minutes read

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டு மணி நேர இடைவெளியில் 4 மோட்டார் சைக்கிள்கள் களவாடப்பட்டுள்ளன.

நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கும் நேற்று அதிகாலை 1 மணிக்கும் இடையிலேயே அவை களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலுக்கு அருகிலுள்ள வீடொன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரது வெள்ளை நிற மோட்டார் சைக்கிள் திருடிச் செல்லப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இருவரே அதனைச் திருடிச் சென்றுள்ளனர். சி.சி.ரி.வி. கமெராவில் அது தெளிவாகப் பதிவாகியுள்ளது.

திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் இலக்கமும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், திருடிச் சென்ற நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விரைவில் அவர்களைப் பிடித்து விடுவோம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சுன்னாகம், அச்சுவேலி, கோப்பாய் ஆகிய பிரதேசங்களிலும் 3 மோட்டார் சைக்கிள்கள் களவாடப்பட்டுள்ளன. ஒரு குழுவே இந்தக் கைங்கரியத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தி, திருடர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More