மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த நாணயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ராணி 2-ம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னர், அவரது மகன் சார்லஸ் மன்னராக அரியணை ஏறியபோதும், அதிகாரபூர்வ முடிசூட்டு விழா பல மாதங்களாக நடைபெறாமலே இருந்து வந்தது. இந்த நிலையில் மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா அடுத்த மாதம் (மே) 6-ந் தேதி நடைபெறவுள்ளது.
லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் அபேயில் மே மாதம் 6-ம் திகதி நடைபெறும் முடிசூட்டு விழாவை குறிக்கும் வகையில் 50 பென்ஸ் மற்றும் 5 பவுண்டுகள் உள்ளிட்ட நாணயங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
டியூடர் கிரீடத்தை அணிந்தபடி மன்னர் 3-ம் சார்லஸின் உருவப்படம் இருக்கும் இந்த நாணயங்களை பிரிட்டனை சேர்ந்த சிற்பி மார்ட்டின் ஜென்னிங்ஸ் என்பவர் வடிவமைத்துள்ளார்.
மன்னர் 3-ம் சார்லஸ் கீரிடம் அணிந்தபடி உள்ள இந்த நாணயங்கள் இம்மாதம் 24-ம் தேதி புழக்கத்திற்கு வருகிறது.