செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சுற்றுலா சென்ற சொகுசு பஸ் விபத்து! – 8 பேர் காயம்

சுற்றுலா சென்ற சொகுசு பஸ் விபத்து! – 8 பேர் காயம்

0 minutes read

புத்தளத்திலிருந்து – நுவரெலியாவுக்குச் சுற்றுலா சென்ற சொகுசு பஸ் ஒன்று, கம்பளை – நூவரெலியா பிரதான வீதியின் ஹெல்பொட பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

22 பேர் பயணித்த மேற்படி சொகுசு பஸ், மண் திட்டில் மோதி – பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இன்று பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த 8 பேரில் நால்வர் கொத்மலை பிராந்திய வைத்தியசாலையிலும், நால்வர் புஸ்ஸல்லாவ வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பஸ்ஸின் சாரதி தூங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More