செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சாவு!

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சாவு!

0 minutes read

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கண்டி, பூஜாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாரத்துகொட நகரில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

பூஜாபிட்டியவிலிருந்து வெலிகல்ல நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளே விபத்துக்குள்ளாகியுள்ளது.

பூஜாபிட்டியவில் வசிக்கும் 28 வயதுடைய மகேஷ் கருணாதிலக என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த இளைஞர் வேலை முடிந்து வீடு திரும்பும்போது விபத்தில் சிக்கியுள்ளார்.

அவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் எதிர்முனைக்கு இழுத்துச் செல்லப்பட்டு மின்கம்பத்தில் மோதியுள்ளது.

சம்பவ இடத்திலேயே குறித்த இளைஞர் சாவடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More