Thursday, September 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் Southport : கைதுசெய்யப்பட்ட இளைஞன் மீது 10 கொலை முயற்சிக் குற்றச்சாட்டு!

Southport : கைதுசெய்யப்பட்ட இளைஞன் மீது 10 கொலை முயற்சிக் குற்றச்சாட்டு!

1 minutes read

வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள Southport நகரில் 3 சிறுமிகள் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட 17 வயது இளைஞன் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

பிரபல பாடகி டெய்லர் சுவிஃப்ட்டின் (Taylor Swift) பாணியில் பிள்ளைகளுக்கு நடன வகுப்பு நடந்துகொண்டிருந்தபோது அங்கு கத்திக்குத்துத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட இளைஞன் 10 கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்குவதாக BBC செய்தி குறிப்பிட்டது.

தொடர்புடைய செய்தி:  Southport போராட்டம்; 100க்கும் அதிகமானோர் கைது!

அத்துடன், வயது காரணமாக பெயர் வெளியிடப்படாத குறித்த இளைஞன் மீது கத்தியுடன் கூடிய பொருள் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சந்தேகநபர், லிவர்பூல் சிட்டி (Liverpool) நீதிமன்றத்தில் இன்று (01 ) காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

நடன வகுப்பில் காயங்களுக்கு உள்ளான 8 பிள்ளைகளுக்கும் 2 பெரியவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. அவர்களில் பலரின் உடல்நிலை இன்னமும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் Southport நகரில் ஏற்பட்ட 3 சிறுமிகளின் மரணங்களுக்காக மத்திய லண்டனில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அதில் கலந்துகொண்ட 100க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More