கனடாவின் பாராளுமன்றத் தேர்தலில் நான்கு இந்திய வம்சாவளியினர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடா பிரதமர் மார்க் கார்னி ஏப்ரல் 28இல் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்ததையடுத்து தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஒரு பக்கம் வேகமாக நடைபெற்றுக் கொண்டு இருக்க, மறுபக்கம் வேட்பாளர்கள் பற்றிய விவரங்களும் வெளியாகி வருகின்றன.
அந்தவகையில் வழக்கத்தை விட இந்த முறை கனடா தேர்தலில் குஜராத்தைச் சேர்ந்த 4 இந்திய வம்சாவளியினர் போட்டியிடுகின்றனர்.
பல ஆண்டுகளாக தெற்காசிய நாடுகளின் அரசியல் களத்தில் பஞ்சாப்-கனடா அரசியல்வாதிகள் அறிமுக முகங்களாக இருந்த நிலையில், இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த குஜராத்தியர்கள் தற்போது ஆதிக்கம் செலுத்தும் இத்தகைய நிகழ்வு, புதிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
பிராம்ப்டன் தொகுதி முதல் கால்கரி வரை, 4 குஜராத் வம்சாவளி வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.
இவர்கள் முதல்முறையாக கனடா பாராளுமன்றத் தேர்தல் களத்தில் நுழைகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.