செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை “எங்களைப் பொம்மைகளாகப் பயன்படுத்த முனையும் அநுர அரசு!”

“எங்களைப் பொம்மைகளாகப் பயன்படுத்த முனையும் அநுர அரசு!”

1 minutes read

“காலாகாலமாக ஆட்சிக்கு வரும் அரசுகள் தொழிற்சங்கங்களைத் தமது தேவைக்கேற்ப பயன்படுத்திய பின் தூக்கி வீசிவிடுவது வழமை. அதேபோன்றே அநுர தலைமையிலான அரசும் கடந்த கால அரசுகள் போலவே எம்மைத் தமக்கான பொம்மைகளாகப் பயன்படுத்த முனைகின்றது.” – என்று வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம் யாழ். ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

அங்கு சம்மேளனத்தினர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம் கடந்த 4 ஆண்டுகளாக மே தினத்தை முன்னெடுத்து வருகின்றது.

அந்தவகையில், இம்முறை நல்லூர் முன்றலில் இருந்து காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் பேரணி ஆரியகுளம் சந்தி வழியாகச் சென்று, ஸ்ரான்லி வீதி, யாழ். நகர் ஊடாக யாழ். மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்து, வை.எம்.சி.ஏ மண்டபத்தில் பேரணிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

நாம் இம்முறை 12 தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் இந்தப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம்.” – என்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More