வட வேல்ஸில் நடந்த ஒரு சிறிய ரக விமான விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
Gwynedd பகுதியில் உள்ள Trawsfynyddக்கு அருகிலுள்ள ஒரு தொலைதூர இடத்தில் இந்த விமானம் கண்டெடுக்கப்பட்டது. விமானத்தில் இருந்த இருவர் உயிரிழந்துவிட்டதாக சம்பவ இடத்திலேயே பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
இங்கிலாந்தின் ஒரு விமான ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், திட்டமிட்டபடி Caernarfon விமான நிலையத்தை வந்தடையவில்லை. இது தொடர்பாக மதியம் 12 மணியளவில் வட வேல்ஸ் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
பல முகமைகள் இணைந்து வான் மற்றும் தரைவழியாக மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னரே இந்த விமானம் கண்டறியப்பட்டது.
இந்த விபத்து குறித்து விமான விபத்துகள் விசாரணைப் பிரிவு (AAIB) தனது புலனாய்வைத் தொடங்கியுள்ளது. வட வேல்ஸ் பொலிஸார் இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த தலைமை கண்காணிப்பாளர் ஓவைன் லெவெலின், இது ஒரு சவாலான தேடுதல் நடவடிக்கையாக இருந்தது என்று கூறினார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அவர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதுடன், தேடுதல் பணியில் ஈடுபட்ட அனைத்து முகமைகளின் அர்ப்பணிப்புக்கும் நன்றி தெரிவித்தார்.