செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கும் விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் ஒருவர் கைது

புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கும் விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் ஒருவர் கைது

1 minutes read

ஹீத்ரோ (Heathrow) விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஸ்டைன்ஸில் (Staines), புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஸ்டான்வெல் ஹோட்டலில் (Stanwell Hotel) சனிக்கிழமை மாலை நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சனிக்கிழமை மாலை 06:30 மணியளவில் கத்திக்குத்து சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இதில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் பலத்த காயமடைந்து, “உயிருக்கு ஆபத்தான நிலையில்” வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொலை முயற்சி சந்தேக குற்றச்சாட்டின் கீழ் 20 வயது மதிக்கத்தக்க சோமாலிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த அறிக்கையின் தீவிரத்தன்மை காரணமாக, ஆயுதம் ஏந்திய பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டு, கைது நடவடிக்கையில் உதவி புரிந்தனர். கைது செய்யப்பட்ட நபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

துப்பறியும் கண்காணிப்பாளர் கேட் ஹைடர் (Kate Hyder) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆரம்பகட்ட விசாரணைகள் நடந்து வருவதால் அப்பகுதியில் தொடர்ந்து பொலிஸ் பாதுகாப்பு நீடிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் உள்ளூர் சமூகத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதை தாங்கள் உணர்வதாகவும், இது குறித்து ஏதேனும் கவலைகள் இருந்தால் உள்ளூர் அதிகாரிகளிடம் பேசுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய வேறு யாரையும் பொலிஸார் தேடவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.