செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வட மாகாண டென்னிஸ் விளையாட்டு வளர்ச்சிக்கு புதிய அத்தியாயம் ; யாழ் ஃபிளமிங்கோஸ் அணி அறிமுக விழா !

வட மாகாண டென்னிஸ் விளையாட்டு வளர்ச்சிக்கு புதிய அத்தியாயம் ; யாழ் ஃபிளமிங்கோஸ் அணி அறிமுக விழா !

1 minutes read

இலங்கை டென்னிஸ் சங்கம் ஏற்பாடு செய்யும் இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் போட்டியில் பங்கேற்கும் எட்டு நகர அணிகளில் ஒன்றான யாழ் ஃபிளமிங்கோஸ் தனது உத்தியோகபூர்வ அணி அறிமுக விழாவை நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் சிட்டி ஹோட்டல் விருந்து மண்டபத்தில் நடத்தியுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் டென்னிஸ் விளையாடும் அனைத்து பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கலந்து கொண்டதுடன், விருந்தினராக அருட்தந்தை அ.பி.திருமகனும் சிறப்பு விருந்தினராக ஷங்கர் ஃபூட்ஸ் யுகே உரிமையாளர், மற்றும் யாழ்ப்பாணம் சிட்டி ஹோட்டல் தலைமை நிர்வாக அதிகாரி, சந்திரசேகரம் கேதீஸ்வரனும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 முதல் 30 வரை கொழும்பு 07, இலங்கை டென்னிஸ் சங்கத்தின் கடின தரை மைதானங்களில் நடைபெறவுள்ளது. இந்த தொழில்முறை லீக் போட்டி, இலங்கையில் டென்னிஸ் விளையாட்டை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வணிக வருவாயை மீண்டும் டென்னிஸ் கட்டமைப்பு மற்றும் இளம் வீரர் மேம்பாட்டிற்காக முதலீடு செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

1904 ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணம் இலங்கையின் முக்கிய டென்னிஸ் மையங்களில் ஒன்றாக விளங்கியது. தேசிய மட்டத்தில் பல சிறந்த வீரர்களை உருவாக்கிய யாழ்ப்பாணம், குறிப்பாக மறைந்த ழூபிராங்க் சபாரத்தினம்ழூ போன்ற புகழ்பெற்ற வீரர்களின் மூலம் நாட்டின் டென்னிஸ் வரலாற்றில் தனித்த இடத்தைப் பெற்றுள்ளது. எனினும், தற்போது பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய டென்னிஸ் மைதானங்களின் பற்றாக்குறையால், நிறப்பந்து நிலையைத் தாண்டி பல சிறுவர்கள் விளையாட்டை தொடர முடியாத நிலை காணப்படுகிறது.

இந்த நிலையை மாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள யாழ் ஃபிளமிங்கோஸ், யாழ்ப்பாணத்தின் டென்னிஸ் பாரம்பரியத்தை மீட்டெடுத்து, இளம் வீரர்களுக்கு நிலையான வளர்ச்சி பாதையை உருவாக்க உறுதிபூண்டுள்ளது.

டென்னிஸ் பற்றிய பொது விழிப்புணர்வை அதிகரித்தல், சமூக டென்னிஸ் மைதானங்களை மேம்படுத்தல், சிறுவர்கள் தொடர்ச்சியாக பயிற்சி பெறும் வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் திறமையான வீரர்களை அடையாளம் கண்டு தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களுக்கு வழிநடத்துதல் ஆகியவை அணியின் பிரதான நோக்கங்களாகும்.

அணி அறிமுக விழாவில், யாழ்ப்பாண மாணவர்களுக்கு டென்னிஸ் விளையாட்டின் எதிர்கால வாய்ப்புகள், இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக்கில் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் மற்றும் யாழ் ஃபிளமிங்கோஸ் அணியின் நோக்கம், செயற்பாடுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

நிகழ்வின் சிறப்பம்சமாக, யாழ் ஃபிளமிங்கோஸ் அணியின் முதல் உத்தியோகபூர்வ ஜெர்சி, அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபனிடம் கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அணியின் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் உத்தியோகபூர்வ அணிச் சீருடைகள் வழங்கப்பட்டன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.