* காலையில் எழுந்தவுடன் கண்டிப்பாக 1/2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது செரிமான சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்ச்சியுடன் வைத்து உடல் சூட்டை தணிக்கும்.

* பாலை தவிர்த்து விட்டு மாலை, இரவு நேரங்களில் மோர் அல்லது தயிரை குடிக்க வேண்டும்.
* 3 நாட்களுக்கு ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் எடுத்தால் உடல் வெப்பம் ஒரே சீராக இருக்கும்.

* நீர்சத்துள்ள தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற காய்கறி, பழங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* சன்ஸ்கிரீன் லோஷன்களை பயன்படுத்தாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் தோல் வறண்டு அதன் பொலிவும் மங்கிப் போகும். குறிப்பாக எஸ்பிஎஃப் 30-க்கு மேல் இருக்கும் க்ரீம்களை பயன்படுத்துவதே சிறந்தது.
* தினமும் ஒரு இளநீர் குடிப்பதன் மூலம் தோலை இளமையாக வைத்து கொள்ளலாம். உடம்பில் நீர்சத்து குறையாமல் இருக்கும். மேலும் இளநீரில் பல்வேறு வகையான கனிமச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன.

* தோலுக்கு சன்ஸ்கிரீன் இருப்பது போலவே முடிக்கும் உள்ளது. அதை பயன்படுத்தினால் வெப்பத்திலிருந்தும் புற ஊதா கதிர்களிலிருந்தும் முடியை பாதுகாக்க முடியும். மேலும், தலைமுடிக்கு செக்கில் அரைத்த சுத்தமான தேங்காய் எண்ணெயை நாள்தோறும் தடவ வேண்டும்.
* முடிந்த அளவுக்கு தளர்வான ஆடைகளை பயன்படுத்துவதே சிறந்தது. குறிப்பாக பருத்தி ஆடைகள் உடலை குளிர்ச்சியாக்கும் வல்லமை படைத்தவை. அதிலும், வெண்மை நிற ஆடைகள் அணிவது இன்னும் சிறப்பு. கருப்பு நிற ஆடைகளை தவிர்ப்பது நல்லது.

* இரவில் தூங்குவதற்கு கோரை பாய்களை பயன்படுத்தலாம். கோரை புற்கள் நீர் நிறைந்த பகுதிகளில் வளர்வதால் நம் உடல் சூட்டை தணிக்கும் தன்மை உள்ளன.