நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்தால் வெளிநாட்டு மண்ணிலும் இந்தியா சண்டையிடும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் பரமாா்த் நிகேதன் ஆசிரமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்தியா எந்தவொரு நாட்டின் மீதும் முதலில் தாக்குதல் நடத்தாது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்தால் மட்டுமே, தகுந்த பதிலடியை உடனடியாக கொடுக்க வேண்டும் என்பதை புதிய பாதுகாப்பு உத்தியாக இந்தியா கொண்டுள்ளது.
இந்தியா அதன் சொந்த மண்ணிலும் தேவைப்பட்டால் வெளிநாட்டு மண்ணிலும் உறுதியுடன் போரிடும். அந்த சண்டையானது இந்தியாவின் தனிப்பட்ட விருப்பங்களுக்கானதாக ஒருபோதும் இருக்காது. ஆனால் அது பரமாா்த் ஆன்மிகத்தின் அடிப்படையைக் கொண்டதாக இருக்கும்.
இந்தியா நாகரிக பண்பாடுடைய நாடு. மதம், மொழி அல்லது எந்தவொரு பிரிவின் அடிப்படையிலும் இந்த நாடு அமையவில்லை. எதை பாா்க்க முடியாதோ, அதுதான் நமது நாட்டின் அடித்தளம். அதாவது கலாசாரம்தான் இந்தியாவின் அடிப்படை என அவர் தெரிவித்துள்ளார்”
லடாக் எல்லையில் இந்தியாவுடன் சீனா கடந்த ஆறு மாதங்களாக மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் நிலையில் அஜித் தோவல் மேற்படி கருத்து தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்திய நாகரிகம் மற்றும் ஆன்மிகம் தொடா்பாகவே அஜித் தோவல் பேசினாா் என அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.