இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் பண்டிகை நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் ரமன் பண்டிகையை முன்னிட்டு தனது வீட்டின் முன்பு கூடியிருந்த ரசிகர்களுடன் நடிகர் ஷாருக்கான் செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் ஷாருக்கான் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
இதற்கு முன் நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட செல்பி வைரலானது. அதேபோன்று விஜய் பாணியில் ஷாருக்கான் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.