அதோ
காணாமல் போன என் குழந்தையின்
பால் புட்டி
நாவறண்ட பிஞ்சின் நெஞ்சில் கல்லை
போட்ட கயவன் எவன்
பல கதைகள் பேசும் குழிகள் அவை
மூச்சறுந்து போனது என் தேசம்
பல ஆண்டுகள் தாண்டியும்
பல கதைகள் சொல்லும் தேகங்களோடு
வாழ்க்கையிழந்த வண்ணங்கள்
ஏராளம்
போர்த்தடம் மிதிக்க வக்கற்றவன்
வந்தோர் போவோரை வழிமறித்து
கொன்ற பயங்கரவாதி ஆனாய்
எப்படி உனக்கு பயங்கரவாதி
தழிழன் ஆவான்
வலி கூட அறியாத குழந்தை
உனக்கு பயங்கரவாதி எப்படி
ஆனான்
தகிக்கிறது குழிகள்
என்புகளாய் போராடும்
என் தேசம் காண்பாய் பிரானே
எட்டி பிடிக்கும் தூரத்தில் கழன்ற
தோட்டாக்கள் கவ்விய தலைகள்
எத்தனை நீ அறிவாய்
அன்று
பள்ளி மாணவியின் குறியில்
புணர்ந்த அணுக்கள் எத்தனை ஆயிரம்
சொல்லிடுமா தன் சோகத்தினை
வந்தவன் புணர்ந்து விட்டு
செல்ல அவள் ஒன்றும்
பொம்மையல்லவே
மானமிழந்த மங்கைகள் என்
தமிழ்ச் சாதியில் காணாய்
இருந்தும் நீ ஏன் கொன்றாய்
அவளே மாய்த்துக்கொள்வாலே
வேங்கைகள் மண்ணில் பிறந்த
மங்கையர் அல்லவா
புலியின் கைகளுக்கு விலங்கிட்டு
வேடிக்கை பார்த்த ஈனச்சாதியில்
பிறந்தவனே
எக்கருவில் பிறந்தாய்.
கேசுதன்